இந்தச் செய்தியால் கொந்தளித்துப் போயுள்ளார் த்ரிஷா.
இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் இப்படிக் கூறியுள்ளார்:
"மங்காத்தா படத்தில் எனக்கும் அஜீத்துக்கும் அப்படி ஒரு காட்சியே கிடையாது. அப்படியே இருந்தாலும் எனக்கு முத்தம் தர அஜீத் ஏன் பயப்படப் போகிறார். நான் என்ன பேயா பிசாசா... இதெல்லாம் ரொம்ப ஓவர்...!"
தமிழில் சுத்தமாக படமே இல்லை த்ரிஷாவுக்கு. எப்போதோ ஒப்பந்தமான கவுதம் மேனனின் சென்னையில் ஒரு மழைக்காலத்தை தூசு தட்ட ஆரம்பித்துள்ளார்களாம். இதன் மூலம் விண்ணைத் தாண்டி வருவாயாவுக்குப் பின் ஏற்பட்ட கவுதம் - த்ரிஷா மனக்கசப்பு தீர்ந்து விட்டதாம்.
"இந்தியில் கவுதம் படத்தில் நடிக்காமல் போனதன் காரணம் வேறு. ஆனால் சென்னையில் ஒரு மழைக்காலம் ஸ்பெஷல் படம். நிச்சயம் விண்ணைத் தாண்டி வருவாயா மாதிரி பேசப்படும்", என்கிறார்.




Back to top
No comments:
Post a Comment