Sunday, November 6, 2011

பெற்ற பிள்ளைகளுடன் சேர விடாமல் தடுக்கும் தந்தை, நயனதாரா- தவிக்கும் பிரபுதேவா

பெற்றெடுத்த பிள்ளைகளுடன் சேர வேண்டாம், பழைய மனைவியைப் பார்க்க வேண்டாம், பழைய வீட்டுக்குப் போக வேண்டாம் என்று தந்தை சுந்தரமும், புது மனைவியாகப் போகும் நயனதாராவும் கூறி வருவதால் பிள்ளைகளைக் காண முடியாவில் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளாராம் பிரபுதேவா.

புலி வால் பிடித்த நாயர் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் பிரபுதேவா. எலியிடமிருந்து சிக்கி புலியிடம் போய் மாட்டியுள்ளார். நயனதாராவின் மீது மோகம் மறறும் காதலால் மனைவி ரமலத்தையும், பி்ள்ளைகளையும் விட்டுப் பிரிந்த பிரபுதேவா, ரமலத்தை விவாகரத்தும் செய்தார். அவர்களை செட்டில் செய்து விட்ட அவரால் உணர்வுகளையும், பாசத்தையும் செட்டில் செய்ய முடியவில்லையாம்.

சினிமாவில் போடப்படும் 'செட்'களைப் போல தனது பழைய உறவுகளையும் கலைத்து விட்டு புது செட் போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்த அவரால் அப்படிச் செய்ய முடியவில்லையாம். காரணம், பிள்ளைப் பாசம் அவரைப் பேயாய் ஆட்டுவிக்கிறதாம். பிள்ளைகளைப் பார்க்கத் துடிக்கிறாராம், ஏங்குகிறாராம்.

இதன் காரணமாக ரமலத்தை விட்டுப் பிரிந்த பின்னரும் கூட மும்பையிலிருந்து சென்னைக்கு ஓடி வந்து பிள்ளைகளைப் பார்த்து வந்தார். இதை அறிந்த நயனதார கொதித்துப் போய் கொந்தளித்து விட்டார். பிள்ளைகளைப் பார்ப்பதாக இருந்தால என்னை மறந்து விடு என்று கூறி விட்டு கேரளாவுக்குப் போய் விட்டார். இதனால் அதிர்ந்த பிரபுதேவா கேரளாவுக்கு ஓடினார். வீட்டுக்குப் போய் கதவைத் தட்டினார், ஆனால் நயனதாரா திறக்கவே இல்லை. நடு ரோட்டில் நின்று அவமானத்திற்குள்ளாகி ஊர் திரும்பினார்.

ஆனால் இதை மறுத்த நயனதாரா, அப்படியெல்லாம் இல்லை, எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை, எங்களது திருமணத்தைப் பார்த்து ஊரே புகழும் என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது வரை, பிரபுதேவா தனது பிள்ளைகளைப் பார்க்க தடையாக இருக்கிறார் என்பதே உண்மை என்று திரையுலகினர் கூறுகின்றனர்.

அதை விட கொடுமையாக, பிரபுதேவாவின் தந்தையும் கூட இப்போது நயனதாராவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறாராம். அதுதான் அத்து விட்டாச்சே, இன்னும் என்ன பழைய வீடு, பழைய பாசம் என்று பிரபுதேவாவிடம் அனல் கக்குகிறாராம் தந்தை சுந்தரம். 

இப்படி மாற்றி மாற்றி நயனதாராவும், தனது தந்தையும் பேசி வருவதால், என்ன செய்வது என்று புரியாமல் பெரும் தவிப்பில் இருக்கிறாராம் பிரபுதேவா. தனது பிள்ளைகளை விட்டுப் பிரிவது எப்படி என்பது தெரியாமல் விழிக்கிறாராம்.

மாற்றி யோசித்தாகி விட்டது, இனி மருகி, உருகி என்ன ஆகப் போகிறது!


Thursday, November 3, 2011

ஐஸ்வர்யாவுக்கு இரட்டை குழந்தை பிறக்கும்?

அபிஷேக்பச்சனை திருமணம் செய்த ஐஸ்வர்யா ராய் தற்போது 9 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதனையடுத்து ஐஸ்வர்யாவுக்கு இரட்டை குழந்தைகள் (ஒரு ஆண், ஒரு பெண்) பிறக்கலாம் என அமிதாப் பச்சனின் குடும்ப ஜோதிடர் ஒருவர் உறுதியாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அன்று காலை(நவம்பர் 11) சரியாக காலை 11 மணி 11 நிமிடம் ஆகும் போது குழந்தைகள் பிறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரட்டை குழந்தைக்கு அப்பாவாகும் சந்தோஷத்தில் உள்ள அபிஷேக் பச்சன் இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்புகளை முடித்து விட தீவிரம் காட்டுகிறார். பிரசவத்தின் போதும், அதற்கடுத்த தினங்களிலும் ஐஸ்வர்யாராய் மற்றும் குழந்தையுடன் இருக்க திட்டமிட்டுள்ளார் அபிஷேக் பச்சன். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேதியாகக் கருதப்படும் 11-11-11 அன்று அவரது பிரசவம் நடக்க வேண்டும் என ஐஸ்வர்யா ராய் மற்றும் பச்சன் குடும்பம் விரும்புவதால், அதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனையடுத்து ஐஸ்வர்யா ராய்யின் பிரசவத்திற்காக மும்பையிலுள்ள 7 ஸ்டார் மருத்துவமனையில் புக்கிங் செய்யப்பட்டுள்ளது

Sunday, October 9, 2011

Sunday, October 2, 2011

சுந்தர் சி கூட்டணியில் அடுத்த இன்னிங்ஸை தொடங்குகிறார் வடிவேலு!


வடிவேலு மீண்டும் நடிப்பாரா? சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல லட்சம் சினிமா ரசிகர்களின் மனதில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்த கேள்வி இதுதான் என்றால் மிகையல்ல.

அவ்வளவு ஏன்... சக சினிமாக்காரர்களே வடிவேலு நகைச்சுவைக்கு மாற்று இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி ஒன்று. ஆம்... மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பிக்கிறார் வடிவேலு.

தேர்தலுக்குப் பிறகு இடைப்பட்ட இந்த ஐந்து மாத காலத்தில் வேறு எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளாமலிருந்தார் வடிவேலு. நானாகத்தான் சினிமாவை விலக்கி வைத்துள்ளேன். என்னை யாரும் விலக்கவில்லை என்று கூறிவந்தார்.

இந்த நிலையில், சுந்தர் சி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் வடிவேலு.

இந்த இருவரும் இணைந்த வின்னர், கிரி, தலைநகரம், நகரம் என அத்தனைப் படங்களுமே நகைச்சுவையில் தனி முத்திரைப் பதித்தவை. ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு முழு வீச்சோடு நடிக்க வரும் வடிவேலுவும், மீண்டும் இயக்கத்தை கையிலெடுத்துள்ள சுந்தர் சியும் மீண்டும் தனி முத்திரை பதிப்பார்கள் என்பதால், இந்தப் படத்துக்கு இப்போதே எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது!

நகைச்சுவைப் புயலே, வாங்க!















back to top Back to top