Thursday, September 29, 2011

மங்காத்தா நடிகருடன் டாப்சி காதல்...?

மங்காத்தா படத்தில் அறிமுகமான நடிகர் மகத்துக்கும், வெள்ளாவி பொண்ணு டாப்சிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி. தமிழில் இவர் நடித்து இந்த ஒருபடம் தான் வெளியாகியுள்ளது. ஆனால் அம்மணிக்கு ஏகப்பட்ட வரவேற்பு. இந்நிலையில் இவருக்கும், மங்காத்தா படத்தில் அஜித்துடன் நடித்துள்ள நடிகர் மகத்துக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசு பரவியுள்ளது. இவர் நடிகர் சிம்புவின் நண்பர் ஆவார்.

Monday, September 26, 2011

Tuesday, September 6, 2011

'முதல்வர்' திரிஷாம்மா'!

முதல்வர் வேடத்தில் நடிக்கும் திரிஷா-கன்னடம், தமிழில் உருவாகிறது

திரிஷா விரைவில் முதலமைச்சர் வேடத்தில் நடிக்கவிருக்கிறார் ஒரு புதிய கன்னடப் படத்தில். இந்தப் படத்தை தமிழிலும் ஒரே சமயத்தில் உருவாக்குகிறார்கள்.

சிஎம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் முற்றிலும் அரசியல் படமல்ல. மாறாக அழகான காதல் கதைதான். இருப்பினும் இதில் முதல்வர் வேடத்தில் திரிஷா நடிக்கப் போகிறார் என்று பரவியுள்ள தகவலால் எதிர்பார்ப்பு ஏகமாகியுள்ளது.

இந்தப் படத்தை கன்னடத்திலும், தமிழிலும் உருவாக்குகிறார்கள். முதலில் இந்த வேடத்தில் நடிப்பதற்காக இயக்குநரும், தயாரிப்பாளரும் அணுகியது அனுஷ்காவைத்தான். அவரது அசத்தலான உயரமும், வசீகரமான முகமும் இந்த கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கும் என நம்பி அனுஷ்காவை நம்பினர். ஆனால் அவருக்கு டேட்ஸ் பிரச்சினை இருந்ததால், அனுஷ்காவை புக் செய்ய முடியாமல் போய் விட்டதாம்.

இதையடுத்தே திரிஷாவை அணுகினர். நான் டப்பு ஜாஸ்தி கேட்பேனே என்று திரிஷா கூறியுள்ளார். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர், நீங்க நடிச்சே ஆகணும் என்று கூறியுள்ளனராம். யோசிக்க கொஞ்சம் டைம் கொடுங்க என்று கேட்டுள்ளாராம் திரிஷா. அவர் சம்மதிப்பார் என்ற நம்பிக்கையில் சிஎம் படக் குழு உள்ளது.

திரிஷா ஏற்கனவே இந்தியில் கத்தா மீத்தா படத்தில் பொதுப்பணித்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

படத்தில் மொத்தம் இரண்டு ஹீரோக்கள். கன்னடப் பதிப்பில் சிவராஜ்குமார் நாயகனாக நடிக்கிறார். தமிழ்ப் பதிப்புக்கு அர்ஜூன் நாயகனாம்.

இப்படம் குறித்து இயக்குநர் ரகுராம் கூறுகையில், இப்படத்தின் தலைப்புதான் சிஎம். மற்றபடி இதில் அரசியல்ஏதும் இல்லை. இரு முதல்வர்களுக்கிடையே ஏற்படும் காதலை இப்படத்தில் கதையாக்கியுள்ளோம் என்றார்.

தமிழக, கர்நாடக மாநிலங்களின் அரசியல் உறவுகளையும், மக்கள் உறவுகளையும் பலப்படுத்தும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.






Monday, September 5, 2011

அஜீத் முத்தம் தர மறுக்க நான் என்ன பேயா பிசாசா? - த்ரிஷா சீறல்



மங்காத்தா படத்தில் த்ரிஷாவின் உதட்டோடு உதடு பதித்து முத்தம் தரும் காட்சி ஒன்று இருந்ததாகவும் அதற்கு த்ரிஷா தயாராக இருந்தும் அஜீத்தான் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கிசுகிசு பரவி வருகிறது.

இந்தச் செய்தியால் கொந்தளித்துப் போயுள்ளார் த்ரிஷா.

இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் இப்படிக் கூறியுள்ளார்:

"மங்காத்தா படத்தில் எனக்கும் அஜீத்துக்கும் அப்படி ஒரு காட்சியே கிடையாது. அப்படியே இருந்தாலும் எனக்கு முத்தம் தர அஜீத் ஏன் பயப்படப் போகிறார். நான் என்ன பேயா பிசாசா... இதெல்லாம் ரொம்ப ஓவர்...!"

தமிழில் சுத்தமாக படமே இல்லை த்ரிஷாவுக்கு. எப்போதோ ஒப்பந்தமான கவுதம் மேனனின் சென்னையில் ஒரு மழைக்காலத்தை தூசு தட்ட ஆரம்பித்துள்ளார்களாம். இதன் மூலம் விண்ணைத் தாண்டி வருவாயாவுக்குப் பின் ஏற்பட்ட கவுதம் - த்ரிஷா மனக்கசப்பு தீர்ந்து விட்டதாம்.

"இந்தியில் கவுதம் படத்தில் நடிக்காமல் போனதன் காரணம் வேறு. ஆனால் சென்னையில் ஒரு மழைக்காலம் ஸ்பெஷல் படம். நிச்சயம் விண்ணைத் தாண்டி வருவாயா மாதிரி பேசப்படும்", என்கிறார்.






back to top Back to top