Friday, August 26, 2011
ஏழாம் அறிவு பட்டையை கிளப்பும் படங்கள்
Wednesday, August 24, 2011
நடிகர் கமல்யின் தவிப்பு
ஜோடி இல்லாமல் தவிக்கும் கமல்?
மறுப்பு தெரிவிப்பதை தவிர வேறு எதுவும் விஸ்வரூபம் குறித்து பேசுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறார் கமல். முக்கியமாக ஹீரோயின் விஷயத்தில். சோனாக்சி சின்கா படத்தில் இல்லை என்றான பிறகு அரை டஜன் நடிகைகளின் பெயர்கள் அடிபட்டன. அடிபட்டதோடு சரி, கமலால் அங்கீகரிக்கப்படவில்லை. இதில் அனுஷ்காவும் உண்டு. ஆச்சரியமாக அனுஷ்காவின் பெயர் இன்னொரு ரவுண்ட் வந்திருக்கிறது. விஸ்வரூபத்துக்கு அனுஷ்காவே போதும் என்று கமல் முடிவு செய்திருப்பதாக ஆழ்வார்பேட்டை அலுவலகம் கிசுகிசுக்கிறது.Tuesday, August 23, 2011
வேலாயுதம் படத்தின் பிரத்தியோக படங்கள் (stills)
Sunday, August 21, 2011
பிரபு தேவாவின் புதிய காதலி
ஆரம்பத்தில் டான்ஸ் மாஸ்டராக இருந்த பிரபு தேவா திடீரென நடிகர் ஆனார். நடனத்தில் காட்டிய கவனம் மாறி, நடிப்பில் மும்முரமாகிவிட்டார். நடிப்பு சான்ஸ் குறைந்தபோது, திடீரென டைரக்டர் ஆகிவிட்டார். இப்படி தன்னுடைய வேலைகள் மாறி வரும் நிலையில், இதே பார்முலாவை தன்னுடைய சொந்த விஷயத்திலும் பயன்படுத்தி வருகிறாரோ என சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கெனவே ரம்லத்தை காதலித்து திருமணம் செய்து, மூன்று குழந்தைகளையும் பெற்ற பிரபு தேவா, திடீரென நயன்தாராவுடன் திருமணம் செய்யப் போவதாக அறிவித்தார். இந்த சூடு அடங்குவதற்குள் பிரபுதேவா பற்றி இன்னொரு சூடான செய்தி வெளிவந்துள்ளது. அவர் இயக்கும் 'எங்கேயும் காதல்' படத்தில் நாயகியாக நடிக்கும் ஹீரோயின் ஹன்ஸிகா மோத்வானி மீது அவருக்கு புதிய காதல் பிறந்துள்ளதாக கிசு..கிசு வெளியாகியுள்ளன. மேலும் இந்த செய்தி நயன்தாராவுக்கும் பிரபு தேவாவுக்கும் இடையே பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ளதாகவும். சென்னை நட்சத்திர ஹோட்டலில் பிரபு தேவாவிடம் கடுமையாக நயன்தாரா சண்டை போட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடைசியில் யாரை தான் பிரபுதேவா கல்யாணம் செய்வாரோ?
Friday, August 19, 2011
சல்மான்கானுக்கு முத்தம் கொடுத்த தமிழ் நடிகை
சல்மான்கானுக்கு முத்தம் கொடுத்த தமிழ் நடிகை
ரெடி படத்தில் சல்மான்கானுக்கு ஒரு காட்சியில் முத்தம் கொடுத்தது உண்மைதான் என நடிகை அசின் கூறியுள்ளார். இதுகுறித்து அசின் கூறுகையில், "ரெடி படத்தில் முத்தக்காட்சி உள்ளது. ஆனால் அது மற்றவர்கள் எதிர்பார்ப்பது மாதிரி ஆபாசமாக இருக்காது. என் கன்னத்தில் சல்மான்கான் முத்தமிடுவது போன்றுதான் அக்காட்சி உள்ளது. நானும் அவருக்கு முத்தம் தருவது போல அமைத்துள்ளனர். ஆனால் கவர்ச்சிக்கு அளவு வைத்துள்ளேன். அதை மீற மாட்டேன். ரெடி குடும்ப பாங்கான படம். சல்மான்கானுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். அவருக்கு யாராவது பிடித்து விட்டால் அவர்களுக்காக எதுவும் செய்வார்" என்றார்.
ரெடி படத்தில் சல்மான்கானுக்கு ஒரு காட்சியில் முத்தம் கொடுத்தது உண்மைதான் என நடிகை அசின் கூறியுள்ளார். இதுகுறித்து அசின் கூறுகையில், "ரெடி படத்தில் முத்தக்காட்சி உள்ளது. ஆனால் அது மற்றவர்கள் எதிர்பார்ப்பது மாதிரி ஆபாசமாக இருக்காது. என் கன்னத்தில் சல்மான்கான் முத்தமிடுவது போன்றுதான் அக்காட்சி உள்ளது. நானும் அவருக்கு முத்தம் தருவது போல அமைத்துள்ளனர். ஆனால் கவர்ச்சிக்கு அளவு வைத்துள்ளேன். அதை மீற மாட்டேன். ரெடி குடும்ப பாங்கான படம். சல்மான்கானுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். அவருக்கு யாராவது பிடித்து விட்டால் அவர்களுக்காக எதுவும் செய்வார்" என்றார்.
Thursday, August 18, 2011
பின்லாடன் பார்க்க நினைத்த படம்
அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தாக்கி, அமெரிக்கப் பாதுகாப்பிற்கே கேள்விக்குறியை போட்டவர், அல்-கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லாடன். பின்னர் அமெரிக்கா படையின் பல ஆண்டுத் தேடலுக்கு பின், பின்லாடனை, பாகிஸ்தானில் சுட்டு கொன்றனர்.
இதனிடையே நடந்த விசாரணை, பின்லாடனை பிடிக்க வகுக்கப்பட்ட திட்டங்கள், அமெரிக்க் கடற்படையின் சீல் படையினர் வகுத்து வியூகங்கள், தாக்குதல் முறைகள் உள்ளிட்டவற்றை வைத்து திரைப்படமாக வெளியாகவுள்ளது பின்லாடன் கொல்லப்பட்ட சம்பவம். 2008ம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் இயக்குனர் கேத்ரின் பிக்லோ இந்த படத்தை இயக்குகிறார். அமெரிக்காவின் ஹோம்லான்ட் பாதுகாப்பு கமிட்டியின் தலைவராக உள்ள பீட்டர் கிங் தயாரிக்கிறார்.
திரைப்பட பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ள கேத்ரின்பிக்லோ மற்றும் திரைக்கதை எழுத்தாளர் மார்க்போல் ஆகியோர் நடிகர்கள் தேர்வை முடித்துள்ளனர். இறுதி முடிவிற்கு காத்திருக்கின்றனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றி வெளிவந்த "த ஹர்ட் லாக்கர்" என்ற திரைப்படம் உலகமெங்கும் மெகா ஹிட்டாக ஓடியது. இதில் அமெரிக்கா ஈராக்கில் நடத்திய குண்டுவீச்சு சம்பவத்தை தழுவி வந்தது.
தற்போது பின்லாடன் கொலையை மையமாக கொண்ட படத்திற்கு, "கில் பின்லாடன்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் அதிகாரி ஒருவர் கூறுகையில், பின்லாடனின் சம்பவங்களை குறித்து பல ரகசிய தகவல்கள் வெளியிட முடியாதவை. இவற்றை வெளியிட்டால், அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு பின்னாட்களில் ஆபத்து வரலாம். திரைப்படங்களுக்கு பேட்டி கொடுப்பது எங்கள் வேலையல்ல. திரைப்படங்களை குறித்து சிந்திப்பதற்கு எங்களுக்கு நேரமும் இல்லை. என்றார்.
Tuesday, August 16, 2011
நடிகர் விஜய் பார்க்கவேண்டிய பதிவு
‘வேலாயுதம்’ படத்தில் விஜய்யின் பிரம்மாண்டம், பேசப்படுவதாக இருக்கும் என்று இயக்குனர் ஜெயம் ராஜா கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: ‘வேலாயுதம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இது கிராமம், நகரம் என மாறி மாறி வரும் கதையை கொண்டது. ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி, சரண்யா மோகன் மற்றும் 15 வில்லன்கள் நடிக்கிறார்கள்.
இதில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமாக இருக்கும். இந்தப் படத்துக்காக விஜய் கொடுத்த ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும் பார்த்து மிரண்டு போனேன். அவரால் 5 நிமிடம் கூட ஷூட்டிங் தாமதமானதில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். படப்பிடிப்பின்போது பல்வேறு பிறந்தநாள்கள் கொண்டாடப்பட்டன.
தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார். வழக்கமான விஜய்யின் படங்களில் என்ன இருக்குமோ, அதைவிட பத்து மடங்கு கமர்சியல் அம்சங்கள் இதில் இடம்பெற்றிருக்கிறது. பொதுவாகவே விஜய்யை பிரம்மாண்டம் என்பார்கள்.
இதில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமாக இருக்கும். இந்தப் படத்துக்காக விஜய் கொடுத்த ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும் பார்த்து மிரண்டு போனேன். அவரால் 5 நிமிடம் கூட ஷூட்டிங் தாமதமானதில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். படப்பிடிப்பின்போது பல்வேறு பிறந்தநாள்கள் கொண்டாடப்பட்டன.
சம்பந்தபட்டவர்களுக்கு தெரியாமலேயே சொந்த செலவில் ‘கேக்’ வாங்கி வந்து ஷாக் கொடுப்பார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கை மறக்கவே முடியாது. விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே காமெடி காட்சிகள் அதிகம் உள்ள படமாகவும் இது இருக்கும். விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. விரைவில் பாடல் வெளியீடு இருக்கும். இவ்வாறு ஜெயம் ராஜா கூறினார்.
Subscribe to:
Posts (Atom)




















































Back to top